
தமிழ்
தமிழர்களின் தாய்மொழி. தமிழ்
திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும்
செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில்
தமிழ் நாட்டிலும் இலங்கையிலும்,
சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி,
துபாய்,
மலேசியா,
தென்னாபிரிக்கா,
மொரீசியஸ்,
பிஜி,
ரீயுனியன்,
டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது.
1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50
இலட்சம் (85
மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
[1]இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த
இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.
[2] திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளீல் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்
[3] மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை
ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது.
திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது.