தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[1]
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.[2] திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளீல் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் [3] மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது.
Friday, October 2, 2009
Friday, September 25, 2009
கலைமகள் விழா
வாகீசர் தமிழ்ப்பள்ளியின் கலைமகள் விழா புரட்டாசி 8ல் நடைப்பெற்றது. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலைமகளின் ஆசிர்வாதத்தைப் பெற்றனர்.
Friday, September 11, 2009
வாகீசர் எங்கள் வாகீசர்!!!
வனப்பு மிகுந்த இயற்கைதனை
வளைத்திருக்கும் வாகீசர்!
வரலாற்றுத் தடயங்களை - தன்
வசிப்பிடமாய் கொண்ட வாகீசர்!
வெற்றி எனும் வம்சாவளி
வழி வந்த வாகீசர்!
வரையறுத்து வகுப்பு நடத்தும்
வல்லவர்களைக் கொண்ட வாகீசர்!
சித்திர வதன குழந்தைகளை
வர்ணம் தீட்டும் வாகீசர்!
வழக்கறிஞர், வைத்தியர் - எனும்
வர்கத்தை உருவாக்கும் வாகீசர்!
வருங்கால சங்கதியை
வளர்த்து விடும் வாகீசர்!
வந்தோரை வரவேற்று
வாழவைக்கும் வாகீசர்!
வண்டல்மண் கோலசிலாங்கூர் - வாசிகளின்
வரப்பிரசாதம் வாகீசர்!
வண்ண வண்ண நினைவுகளை
வருடுகின்ற வாகீசர்! எங்கள் வாகீசர்!
ஆக்கம்
குமாரி வீ ஜெகதாம்பாள்
Wednesday, August 26, 2009
வாகீசர் என்றால்.................
வாகீசர் என்பது சைவ சமய குரவர் திருநாவுக்கரசராகிய பெருந்தகையார்க்குள்ள வேறு திருப்பெயராகும். இவர்க்கு, இத் திருவதிகை வீரட்டானக் கோயிலில் ஒரு தனிக்கோயில் உண்டு. இக்கோயிலைக் கட்டியவர், கூத்தனான காலிங்கராயர் ஆவார்.
ஈச னதிகையில்வா கீச னெழுந்தருள
மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான் - பூசல்
விளைவித்த வேணாடும் வெற்பனைத்துஞ் செந்தீ
வளைவித்தான் தொண்டையார் மன்.
என்னும் வீரட்டானக்கோயில் கல்வெட்டுப் பாடலால் விளங்கும்.
ஈச னதிகையில்வா கீச னெழுந்தருள
மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான் - பூசல்
விளைவித்த வேணாடும் வெற்பனைத்துஞ் செந்தீ
வளைவித்தான் தொண்டையார் மன்.
என்னும் வீரட்டானக்கோயில் கல்வெட்டுப் பாடலால் விளங்கும்.
Subscribe to:
Posts (Atom)