

அனைவருக்கும் எனது மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். உலகெங்கும் வாழும் தமிழர் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.
தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[1]வனப்பு மிகுந்த இயற்கைதனை
வளைத்திருக்கும் வாகீசர்!
வரலாற்றுத் தடயங்களை - தன்
வசிப்பிடமாய் கொண்ட வாகீசர்!
வெற்றி எனும் வம்சாவளி
வழி வந்த வாகீசர்!
வரையறுத்து வகுப்பு நடத்தும்
வல்லவர்களைக் கொண்ட வாகீசர்!
சித்திர வதன குழந்தைகளை
வர்ணம் தீட்டும் வாகீசர்!
வழக்கறிஞர், வைத்தியர் - எனும்
வர்கத்தை உருவாக்கும் வாகீசர்!
வருங்கால சங்கதியை
வளர்த்து விடும் வாகீசர்!
வந்தோரை வரவேற்று
வாழவைக்கும் வாகீசர்!
வண்டல்மண் கோலசிலாங்கூர் - வாசிகளின்
வரப்பிரசாதம் வாகீசர்!
வண்ண வண்ண நினைவுகளை
வருடுகின்ற வாகீசர்! எங்கள் வாகீசர்!
ஆக்கம்
குமாரி வீ ஜெகதாம்பாள்
வாகீசர் என்பது சைவ சமய குரவர் திருநாவுக்கரசராகிய பெருந்தகையார்க்குள்ள வேறு திருப்பெயராகும். இவர்க்கு, இத் திருவதிகை வீரட்டானக் கோயிலில் ஒரு தனிக்கோயில் உண்டு. இக்கோயிலைக் கட்டியவர், கூத்தனான காலிங்கராயர் ஆவார்.